கடத்தூர், மார்ச் 7: கடத்தூர் அருகே ராணி மூக்கனூரில் பயன்பாட்டிற்கு வராத சேவை மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடத்தூர் அருகே ராணி மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வருமானவரி, சாதிசான்றிதழ், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு கடும் சிரமப்பட்டு வந்தனர். எனவே இப்பகுதியில் சேவை மையம் அமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் ேபரில், கடந்த 2015-16ம் ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக ேவலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ₹18லட்சம் மதிப்பீட்டில், இப்பகுதியில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சேவை மையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என, மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.