×

காரிமங்கலம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதியது

தர்மபுரி, மார்ச் 7: காரிமங்கலம் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில், 13பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரில் இருந்து கோவைக்கு அரசு சொகுசு விரைவு பஸ் நேற்று அதிகாலை புறப்பட்டது. டிரைவராக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த கருணாகரனும் (39), கண்டக்டராக தொப்பூர் வேட்டகவுண்டன்கொட்டாய் முருகனும்(35) இருந்தனர். பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி அருகே பஸ் சென்ற போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.  இதில் பஸ்சின் முன்பக்கம் முற்றிலுமாக நொறுங்கியது. டிரைவர், கண்டக்டர் உள்பட பஸ்சில் பயணித்த 13பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Calimangalam ,
× RELATED காரிமங்கலம் அரசு மருத்துவமனையில்...