×

தாசில்தார், பிடிஓக்கள் பணியிட மாறுதலை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 7:  அரசு ஊழியர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளின்படி பணியிட மாறுதல் செய்யப்பட்டுவதை கண்டித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Tags : Tashildar ,government employees ,BOTOs ,
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்