×

வாலிபர் மாயம்

புதுச்சேரி, மார்ச் 6:  புதுவை முத்தியால்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் பாலாஜி (31). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். திருமணம் ஆகாதவர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி மாலை, பாலாஜியிடம் பணம் கொடுத்து, கடையில் பல்பு வாங்கிவர அவரது தந்தை அனுப்பியுள்ளார். கடைக்கு சென்றவர், அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தம்பி விஜய் ஆனந்த் (29) முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மாயமான பாலாஜியை தேடி வருகின்றனர்.

Tags : magician ,
× RELATED கேரளாவில் 2 பெண்கள் நரபலி...