×

ஜலகண்டாபுரம் வேளாண் சங்கத்தில் 12.5 டன் தேங்காய் பருப்பு ₹14 லட்சத்திற்கு ஏலம்

ஜலகண்டாபுரம், மார்ச் 6: ஜலகண்டாபுரத்தில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ₹14 லட்சத்திற்கு ஏலம் போனது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க, கொங்கணாபுரம் கிளை சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த ஏலத்தில் ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 250 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவை தரத்திற்கு தகுந்தாற்போல் முதல் தரம், குறைந்தபட்சமாக கிலோ ₹90. 45 காசுகள் முதல் அதிகபட்சமாக ₹100. 40 காசுகள் வரையும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக கிலோ 47 ரூபாய் 75 காசுகள் முதல், அதிகபட்சமாக 62 ரூபாய் 75 காசுகள் வரை ஏலம் போனது. இதன் மூலம் ₹14 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Tags : Jalakandapuram Agricultural Association ,auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்