×

கீழ்வேளூர் அருகே புயலால் பாதித்த மரங்களுக்கு

நிவாரணம் வழங்க கோரிக்கைநாகை, மார்ச் 6: நாகை அடுத்த கீழ்வேளூர் அருகே புயலால் பாதித்த மரங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா புதுப்பள்ளி கிராம மக்கள் சார்பில் நாகை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் வழங்கி மனுவில்: புதுப்பள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி வீசிய கஜா புயல் மற்றும் கடல் நீர் உட்புகுந்ததில் தென்னை, மா, முந்திரி மற்றும் இதர மரங்களும் முற்றுலுமாக சேதமடைந்து விட்டது.

சேதமடைந்த தென்னை மரங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை, உடன் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை உடன் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : storms ,Kilaveloor ,
× RELATED மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில்...