×

ஆரணி தேவிகாபுரத்தில் நகை, அடகு கடைகளில் 16 மணி நேரம் சோதனை

ஆரணி, மார்ச் 6: ஆரணி, தேவிகாபுரத்தில் உள்ள 4 நகை மற்றும் அடகு கடைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய 16 மணி நேர சோதனையில் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், பணம், நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆரணி லிங்கப்பன் தெருவில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அப்போது ஆரணியில் உள்ள 3 நகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு சொந்தமான தேவிகாபுரத்தில் உள்ள ஒரு நகை கடை என மொத்தம் 4 கடைகளில் 20 பேர் கொண்ட அதிகாரிகள் 4 குழுவாக சென்று சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் இருந்த நகைகள், ஆவணங்கள், அடகு நகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கடை உரிமையாளர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரவு முழுவதும் சோதனை நடத்திய அதிகாரிகள் சுமார் 16 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் சோதனையை முடித்துக்கொண்டனர். அப்போது, கடையில் இருந்த கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

Tags : Aryan ,Devikapuram Jewelry ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை