×

மூக்கனூர் மலையில் 2வது நாளாக காட்டுத்தீ

தர்மபுரி, மார்ச் 1: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனசரகத்திற்கு உட்பட்டது மூக்கனூர் வனப்பகுதி. இந்த வனப்பகுதிக்குட்பட்ட வெள்ளோலை அருகே, மலை உச்சியில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், அங்கு செல்வதற்கு முன்பு தானாகவே தீ அணைந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு, மீண்டும் மூக்கனூர் மலைப்பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மொரப்பூர் வனத்துறையினர் எரிந்து கொண்டிருக்கும் மலைப்பகுதிக்கு சென்று, தீயை அணைக்கும் பணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மூக்கனூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மட்டும் தீப்பிடித்து எரிவது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : hill ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...