×

பள்ளி காவலர் மர்மச்சாவு

ஜெயங்கொண்டம், பிப்.27: ஜெயங்கொண்டம் அருகே பள்ளி காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு கிராமம் மகிமைபுரத்தைச் சேர்ந்தவர் தனராஜ்(65). இவர் தனியார் பள்ளி ஒன்றில் இரவு காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனராஜ் நேற்று முன்தினம் மாலை மகிமைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இரவு காவலர் பணிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர். நேற்று காலை மர்மமான முறையில் வயல் பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து அவரது மகன் சேகர்(41) ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா