×

பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

 

பெரம்பலூர்,ஏப்.29: பெரம்பலூரில் வல்லப விநாயகர் மற்றும் மாரி யம்மனுக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகரிலுள்ள வள்ளலார் தெரு(எடத் தெருவில்) எழுந்தருளி அருள் பாலித்து வரும் வல்லப விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இரவு 7 மணிய ளவில் விநாயகருக்கு மற்றும் மாரியம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம்,இளநீர், பழ வகைகளுடன்.சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் சிவன்கோயில் மேற்கு பின் புறம் எழுந்தருளி அருள்பாலித்து வரும், ராஜகணபதிக்கு 8 மணியளவில் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா appeared first on Dinakaran.

Tags : Sangadahara Chaturthi Festival ,Vallabhavinayakar Temple ,Perambalur ,Sangadahara Chaturthi ceremony ,Vallabha ,Vinayagar ,Mari Yamman ,Vallabha Vinayagar ,Mariamman ,Vallalar Street ,Edath Street ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...