×

பாரதிபுரம் அருகே அரிசி ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் பழுதானது

தர்மபுரி, பிப்.27: தர்மபுரி பாரதிபுரம் அருகே அரிசி ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தர்மபுரி டவுன் பாரதிபுரத்தில் அரசு வாணிப கழகத்தின் உணவு பாதுகாப்பு குடோன் உள்ளது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் இங்கிருந்து. ரேஷன்கடைகளுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் விநியோகம் செய்ய லாரிகள் மூலம் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில், பாரதிபுரம் உணவு குடோனில் இருந்து ஒரு லாரி அரிசி மூட்டைகளுடன் புறப்பட்டது. பாரதிபுரம் சேலம் பைபாஸ் ரோடு சந்திப்பில் திரும்பும் போது, நடுரோட்டில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக லாரி நின்றுவிட்டது. இதையடுத்து லாரி மெக்கானிக்குகள் லாரியை சோதனையிட்டதில், பேட்டரி பழுது காரணமாக லாரி நின்றது தெரியவந்தது. உடனடியாக புதிய பேட்டரி கொண்டுவரப்பட்டு லாரியில் பொருத்தப்பட்டது. இதன்பின்னர் பழுது சரியானதும் லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து டவுன் நோக்கி சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தன. பழுது நீக்கப்பட்ட லாரி சென்றதும் வாகன போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Tags : Bharathipuram ,
× RELATED திண்டுக்கல் சாய்பாபா ஆலயத்தில் அன்னதானம் வழங்கல்