×

இந்திய விமானபடையின் சாகச செயலை பாராட்டி பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தர்மபுரி, பிப்.27: கடந்த சிலநாட்களுக்கு முன் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த, இந்திய ராணுவவீரர்கள் 40 பேரை வெடிகுண்டுகள் மூலம் தீவிரவாதிகள் கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய விமானப்படை வீரர்கள், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள தீவிரவாதிகள் முகாமில் வெடிகுண்டுகளை போட்டு, தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்திய விமான படையின் சாகச செயலை பாராட்டி, தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், தர்மபுரி 4 ரோடு அருகே மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் செல்லப்பாண்டியன், சுகுமார், நகர தலைவர் சரவணன், வெற்றி, ரமேஷ்வர்மா, பிரபாகரன், சரவணன், செந்தில், வழக்கறிஞர் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : celebration ,crash ,airbase ,crackdown ,Indian ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!