×

ராணுவவீரர்கள் நினைவு மரக்கன்று நடும் விழா

ஒட்டன்சத்திரம், பிப். 27:ஒட்டன்சத்திரம்  அருகே நீலமலைக்கோட்டை கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த  இடத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களின்  நினைவாக 40 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்  விஜயசந்திரிகா, ‘விழுதுகள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி,  செயலாளர் காந்தி, ஊராட்சி செயலாளர் பவுல்ராஜ் மற்றும் மகாத்மா காந்தி தேசிய  ஊரக பணியாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

வேடசந்தூர்  பேரூராட்சியில் செயல்அலுவலர் கோபிநாதன், எம்எல்ஏ பரமசிவம் தலைமையில்  மரக்கன்று நடும் விழா நடந்தது. டிஎஸ்பி அலுவலகம் துவங்கி ஆத்துமேடு  மார்க்கெட் ரோடு வரை சுமார் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் டிஎஸ்பி  சிவக்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நிர்வாகிகள் சந்தானம்,  பாபுசேட், காளியப்பன், பாக்குரூதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : celebration ,sermon ,
× RELATED எதிர்கால தமிழ்நாட்டிற்கான...