மதுரை, பிப்.26: ஏ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமையாசிரியர் வாசிமலை வரவேற்றார். விழாவில் முன்னாள் கல்வி மாவட்ட அலுவலர் சீனிவாசமூர்த்தி, மேலவளவு காவல் ஆய்வாளர்கள் திருமாறன், நீதிவேந்தன், சட்ட ஆலோசகர் வெங்கடேசன், கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் சுரேஷ், தனியார் டிரஸ்ட் திட்ட இயக்குநர் வெண்ணிலா, சமூக ஆர்வலர் செல்வராஜ் ஆகியோர் மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் கல்வியாண்டில் சிறந்து மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்ற பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கற்பகலதா, மீனாப்ரியா, சங்கரலிங்கம், விஜயலெட்சுமி, சேதுபதி ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் பல்வேறு கலைநிகழ்ச்சியை நடத்தினர். ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.