×

பாட்டி இறந்த சோகம் தாங்காமல் பேரன் விஷம் குடித்து தற்கொலை

சிவகாசி, பிப்.22: சிவகாசி அருகே பாட்டி இறந்த சோகம் தாங்காமல் பேரன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே சாரதா நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் பால்பாண்டி(37). இவரது பாட்டி கடந்த வாரம் இறந்து விட்டார். பாட்டி இறந்ததில் இருந்து பால்பாண்டி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : Grandmothers ,
× RELATED புதுவையில் புதிய உச்சத்தை எட்டிய...