×

மொரப்பூர் பிடிஓ அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி, பிப்.21: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், மொரப்பூர் பிடிஓ அலுவலகத்தில் நாளை(22ம் தேதி)  நடக்கிறது. இம்முகாமில், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள காலணிகள் தயாரிக்கும் நிறுவனம், தங்களது கிருஷ்ணகிரி மாவட்ட கிளைக்கு தேவையான ஆட்களை, மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னிகுளம், ஈச்சம்பாடி, இருமத்தூர், ஜக்குப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, மொரப்பூர், நவலை, பாளையம்பள்ளி, போளையம்பள்ளி, ராமியனஅள்ளி, சாமண்டஅள்ளி, சந்தப்பட்டி ஆகிய 13 கிராமங்களிலிருந்து தேர்வு செய்ய உள்ளனர்.    எனவே, மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் ஆண்கள், உரிய சான்றிதழ்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.  அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி, நேர்முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படும். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாளை (22ம் தேதி) காலை 9 மணிக்கு மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Office ,BTO ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...