×

மாட்டுவண்டி, மணல் பறிமுதல்

பண்ருட்டி, பிப். 21: பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதி கெடிலம் ஆற்றங்கரையில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு நேற்று  தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் சென்று பார்த்தபோது அனுமதியின்றி மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதன் காரணமாக அங்கிருந்த மாட்டுவண்டி உரிமையாளர் சிவக்குமார்(40) என்பவரை கைது செய்து, அவரது மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் 3 மாட்டு வண்டிகளையும், மணலையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED விஷ சாராய விவகாரம் மேலும் ஒருவர்...