×

பதிவு பெற்ற உறுப்பினர்கள் ஆதார் எண்ணை இணைக்க அழைப்பு

தர்மபுரி, பிப்.20: தர்மபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நல வாரியங்கள் அமைத்து அதில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு அமைப்புச்சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும், வாரிசுதாரர்களுக்கும் அரசு வழங்கும் நலத்திட்டங்களான கல்வி, திருமணம்,  மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 2014 மற்றும் 2015ல் பதிவு பெற்ற தொழிலாளர்களும் 2014 முதல் 2017 அக்டோபர் மாதம் வரை புதுப்பித்தல் செய்துக்கொண்ட தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பதிவு அட்டை நகலினை இவ்வலுவலகத்திற்கு வரும் 28ம் தேதிக்குள் நேரிலோ(அ) தபால் வழியிலோ தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தர்மபுரி என்ற முகவரிக்கு அனுப்பு வேண்டும் . இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) இந்தியா தெரிவித்துள்ளார்.

Tags : Adhar ,
× RELATED ஆதார் அட்டை திருத்தம் செய்ய சிறப்பு முகாம்