×

செல்போன் டவருக்கு எதிர்ப்பு

புழல்: செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டூர் கோமதி அம்மன் நகரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கோமதி அம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன்  நிறுவன டவர் (கோபுரம்) அமைப்பதற்காக நேற்று முன்தினம் பணிகள் துவங்கின. இந்நிலையில், அப்பகுதி செல்போன் டவர் அமைக்க கூடாது. டவரில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சால், கர்ப்பிணிகள், குழந்ைதகள் ஆகியோர்  பாதிக்கப்படுவார்கள். எனவே டவர் அமைக்கக்கூடாது என பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த, செங்குன்றம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர்.


Tags : cellphone tower ,
× RELATED செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் மறியல்