×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்ஊழியர் வீட்டில் 22 பவுன் கொள்ளை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.12: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்ஊழியர் வீட்டில் 22 பவுன் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஜம்முனஅள்ளியை சேர்ந்தவர்  ராமலிங்கம்(45). இவர் தீர்த்தமலையில் உள்ள மின்சார அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி இளமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் படித்து வருகின்றனர். ராமலிங்கத்தின் உறவினர் சிவலிங்கம் என்பவரின் வீட்டு திருமணத்தையொட்டி, பத்திரகை வைப்பதற்காக சிவலிங்கத்துடன் ராமலிங்கம் நேற்று முன்தினம் மாலை சென்றார். இந்நிலையில் இளமதியும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, அரூருக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். நேற்று இரவு 11 மணியளவில் இருவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது.

மேலும் சமையல் அறையில் உள்ள டப்பாவில் வைத்திருந்த 22 பவுன் நகை திருடு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து ராமலிங்கம் கோபிநாதம்பட்டி கூட்டுரோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடம் வந்த,  அரூர் டிஎஸ்பி செல்லப்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மோப்ப நாய்களை வரவைத்து, கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : robbery ,home ,electrician ,Pappirippatti ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...