×

எஸ்.கே.எம் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு புத்தகம் வழங்கல்

ஈரோடு, பிப். 7:  100 அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் எஸ்.கே.எம் நிறுவனம் வழங்கியது.
  எஸ்.கே.எம் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்து. விழாவுக்கு எஸ்.கே.எம் குழுமங்களின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி வரவேற்று பேசினார். விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்துகொண்டு புத்தகங்களை வழங்கினார்.
 இதில் ஒரு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 41 புத்தகங்கள் வீதம், மொத்தம் 100 அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், எஸ்.கே.எம் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், இயக்குனர் சியாமளா ஷர்மிலி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : government schools ,SKM ,
× RELATED சென்னையில் இணையவசதியுடன் 200...