×

பாலக்கோடு அருகே தீயில் கருகி பலியான 50 புறா, குருவிகள்

பாலக்கோடு, பிப்.7: பாலக்கோடு அருகே வீட்டின் மேல் மாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 புறா மற்றும் குருவிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மைதீன் நகரை சேர்ந்தவர் மசாப் ஜான். புளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டின் மேல் மாடியில் 50 புறாக்கள், குருவிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புறா, குருவிகள் வைக்கப்பட்டிருந்த கூண்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மசாப் ஜான், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கூண்டில் இருந்த 50 புறா, குருவிகள் கருகி உயிரிழந்தன. இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்கள் கூறுகையில், ‘கூண்டு வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே உள்ள ஒயரில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : balcony ,fire ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா