×

அரிமளம், திருமயம் பகுதிகளில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருமயம்,பிப்.7:புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையோரம், பள்ளி, குடியிறுப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை களை அகற்ற ர்ட் இருந்த போதிலும் அரிமளம், திருமயம் பகுதியில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் இன்றளவும் சர்ச்சைகுறிய இடங்களிலேயே செயல்பட்டு வருகிறது. அவ்வாறு இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகள் மக்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காததால் போராட்டம் நீர்த்து போய் மக்களும் போராடி சோர்ந்து விட்டனர்.இதனால் பள்ளி, கடைவீதி பகுதிகளில் மது குடிவிட்டு அநாகரிகமான செய்கை களில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருபுறம் இருக்க அளவுக் கதிகமாக குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்குபவர்கள் எண்ணிக்கையும் அதிமாகி கொண் டே வருகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுவை பாட்டில்களில் வாங்கும் குடிமகன் கள் டாஸ்மாக் கடையில் போதுமான இட வசதிகளுடன் பார் இல்லாததால் திறந்த வெளியில் மது குடிக்க செல்கின்றனர். இதில் பெரும்பாலான குடிமகன்கள் மது குடிக்க தேர்ந்தெடுப்பது சாலையோர பகுதி, பள்ளி, கோயில் வளாகம், கண்மாய், ஊராணி உள்ளிட்ட நீர் நிலைகள், கொல்லை பகுதிகள், காட்டுப் பகுதிகளாக இருக்கின்றது. அப்பகுதிகளில் நண்பர்களுடன் மது குடிப்பவர்கள் தாங்கள் மது குடிக்க பயன்படுத்திய பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், கப்புகள், வாட்டர் பாக்கெட்டு களை அங்கேயே விட்டு செல்கின்றனர். இவைகள் காற்றில் அப்பகுதி முழுவதும் பறந்து நீர்வரத்து வாரிகளை அடைப்பதொடு, சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படு த்துகிறது.

தற்போது அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ள போதிலும் ஏற்கனவே விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் அரிமளம், திருமயம் பகுதியில் பரவிக் கிடப்பதை காண முடிகிறது. மேலும் இது போன்ற காலி மது பாட்டில்கள் அப்பகுதியில் நடமாடும் சிறுவர்கள் கண்ணில் படும் போது சிறுவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் உருவாக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஒருசிலர் மதுவை குடித்துவிட்டு காலியான கண்ணாடி பாட்டில் களை சாலையின் நடுவில், நீர்நிலைகள், ஊரணி படிகட்டுகள், விவசாய நிலங் கள், பஸ்ஸ்டாப் பகுதிகளில் உடைத்து எறிவதால் அப்பகுதிகளில் குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனிடையே விவசாய நிலங்கள், நீர் நிலை பகுதிகளில் உடைத்தெறியபட்ட பாட்டில்கள் மணலில் புதைந்து போவதால் விவசாய பணிகள் மேற்கொள்ளும் போது மணலில் புதைந்த பாட்டில்கள் விவசாயிகள் உடலில் வெட்டி காயத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்ணாடி பாட்டில்களில் மது அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைப்பது கடினம், அப்படியே உடைத்தாலும் கண்ணாடி பாட்டில்கள் போல் சிதறுவ தில்லை. இதனால் சுற்றுசூழல், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில்  மாசுபாடு வது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித் தனர்.மறு சுழற்சி செய்ய நடவடிக்கைகாலிமதுபாட்டில்களை மறு சுழற்சி செய்ய அரசு முன்வர வேண்டும். தற்போதுள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் கண்ணாடி பாட்டில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கண்ணாடி பொருட்கள் நூறு சதவீதம் மறுசுழற்சி செய்யக் கூடியது. அப்படி இருக்கையில் தமிழக அரசின் கீம் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் காலியாக குவிந்து கிடக்கும் மது பாட்டில்களை உடனு க்குடன் மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே டாஸ்மாக் கடை வளாகத்தை விட்டு மது பாட்டில்களை வெளியில் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.

Tags : areas ,Tirumala ,spaces ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ