×

காரிமங்கலம் அருகே பரபரப்பு ஜவுளி வியாபாரி காரில் கடத்தல்மர்ம கும்பலுக்கு வலை

காரிமங்கலம், பிப்.6:  காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரியை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தாசரஅள்ளியை சேர்ந்தவர் சென்னையன் (53). ஜவுளி வியாபாரி. இவருடைய மாமியார் வீடு காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியில் உள்ளது. நேற்று முன்தினம் மாட்லாம்பட்டிக்கு வந்த சென்னையன், அதே பகுதியை சேர்ந்த நேரு என்பவருடன் பெரியாம்பட்டிக்கு டூவீலரில் சென்றார். பின்னர் இரவு இருவரும் மாட்லாம்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். சமத்துவபுரம் பகுதி அருகே வந்தபோது, காரில் வந்த மர்மகும்பல், சென்னையன் சென்ற டூவீலரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் சென்னையனை காரில் கடத்தி சென்றனர். இதை தடுக்க முயன்ற நேருவை தள்ளிவிட்டனர். இதையடுத்து நேரு அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் அவர்கள் வந்த டூவீலரையும் கும்பல் எடுத்து சென்றது.  இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், சென்னையன் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையனையும், அவரை கடத்தி சென்ற மர்ம கும்பலையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மாட்லாம்பட்டி பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : textile shop ,Calimangalam ,
× RELATED காற்று மாசு, ஒலிமாசு ஏற்படுத்துவதாக...