மரக்காணம், பிப். 6: மரக்காணம் அருகே செட்டி நகர் பகுதியில் இசிஆர் சாலையில் மரக்காணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிபு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் அதில் பல அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது. உடனே போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் திண்டிவனம் அருகில் உள்ள பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (30) என்பதும், இவர் அடிக்கடி புதுவையில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி சென்று அப்பகுதியில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார், மதுபாட்டில்கள் கடத்திய கார் மற்றும் அதிலிருருந்த 576 மதுபாட்டில்கள், 25 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கார் டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.