×

மரக்காணம் அருகே வரதட்சணை கேட்டு இளம்ெபண்ணுக்கு கொலை மிரட்டல்

காலாப்பட்டு, பிப். 4: மரக்காணம் அருகே இளம்பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன், அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் பூரணி (22). இவருக்கும் கீழ்பேட்டை பகுதியை சேர்ந்த ஞானசேகர் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.ஞானசேகர், அவரது சகோதரர் ரகுபதி மற்றும் தாயார் செந்தாமரை ஆகிய 3 பேரும் சேர்ந்து அடிக்கடி பூரணியிடம் கூடுதலாக நகை, பணம் வரதட்சணை கேட்டு அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.கடந்த மாதம் மீண்டும் இதேபோல் பூரணியை தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி கூறி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.இதுகுறித்து பூரணி கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் துர்கா தலைமையிலான போலீசார் ஞானசேகர், அவரது சகோதரர் ரகுபதி, தாயார் செந்தாமரை ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிந்து ஞானசேகர், ரகுபதியை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Hearing dowry ,marakkan ,
× RELATED மரக்காணம் அருகே ₹5 கோடியில் கட்டப்பட்ட...