×

மனிதநேய வார விழா நிறைவு

ஈரோடு, பிப். 2: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனிதநேய வாரவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், வாழ்க்கையோடு இணைந்ததுதான் பண்பாடு மற்றும் மனிதநேயம். வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒழுக்கம், நல்லநெறிகள் மற்றும் மனிதநேயத்தை சொல்லி தர வேண்டும் என்றார்.

Tags : completion ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா