×

ஊக்கத்தொகையுடன் தொழில் பழகுனர் பயிற்சி: கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர், பிப்.1:திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் தொழில் பழகுனர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில் 6 தொழில் பழகுநர்களுக்கு தோட்டக்கலை துறை சார்பில் பிட்டர், பிளம்பர், டிராப்ஸ்மேன் சிவில்-4 ஆகியவற்றிக்கு படித்த இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது. ஓராண்டு பயிற்சி முடிந்த பின் சான்றிதழ் வழங்கப்படும். மாநில,மத்திய, அயல்நாடுகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கிறது. இப்பயிற்சியில் ஓராண்டிற்கு 500 தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்படும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தொழில் பழகுனர் பயிற்சியில் ஈடுபட ஆர்வம் உள்ள இளைஞர்கள் tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ddhtirupur@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பயன்
பெறலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Collector Announcement ,
× RELATED சென்னை மாவட்டத்தில் இன்று முதல்...