×

ஜாக்டோ- ஜியோ போராட்டம் ஊழியர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

சிதம்பரம், ஜன. 31: புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ- ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஒருவார காலமாக சிதம்பரத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாததால் நிர்வாகம் ஸ்தம்பித்தது. இந்நிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் நேற்று முதல் பள்ளிகள் இயங்கியது. ஆனால் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் நேற்றும் வேலைக்கு வராததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : jacketo-joi battles ,
× RELATED நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது