×

பால் வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை

பண்ருட்டி, ஜன. 31: பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன்(45). பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தற்போது தனது குடும்பத்துடன் பண்ருட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பால் வியாபாரி என்பதால் நாள்தோறும் மேல்குமாரமங்கலம் கிராமத்திற்கு சென்று பாலை வாங்கிகொண்டு வந்து பண்ருட்டியில் வந்து வியாபாரம் செய்வது வழக்கம். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆள் நியமித்து பால் வாங்கி வருகிறார். இந்நிலையில் மேல்குமாரமங்கலத்தில் உள்ள பழனியப்பன் வீட்டின் அருகில் அவரது பணியாளர் பால் கறப்பதற்கு சென்றபோது வீட்டின் முன்கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து பழனியப்பனிடம் தெரிவித்தார். சம்பவ இடம் சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் பூஜை அறையில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் பணம் திருடுபோனது தெரிய வந்தது.  இதுகுறித்து பண்ருட்டி காவல்நிலையத்தில் பழனியப்பன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். திருடுபோன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும்.

Tags : home ,tenant ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...