×

முள்ளுக்குறிச்சியில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாமகிரிப்பேட்ைட, ஜன.31: முள்ளுக்குறிச்சியில் இருந்து கொல்லிமலை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி மயானத்தின் அருகே கொல்லிமலை செல்லும் சாலை உள்ளது. முள்ளுக்குறிச்சி மற்றும் பக்கத்து கிராமங்களில் இருந்து கிராம மக்கள், கொல்லிமலைக்கு பல்வேறு விளை பொருட்கள் வாங்க செல்வதற்கு, இந்த சாலை முக்கியமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சாலை கரடு முரடாக உள்ளது. இதை தொடர்ந்து தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டி சமப்படுத்தப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தார் சாலை அமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், விளை பொருட்களை டிராக்டரில் ஏற்றிச்செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே சிதிலமடைந்து காணப்படும் இந்த சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




Tags : road ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து