×

கடத்தூர் அருகே நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை

கடத்தூர், ஜன.31: கடத்தூர் அருகே சவுளுகொட்டாய் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடத்தூர்-தாளத்தம் வழியாக பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டிக்கு செல்லும் சாலையில் சவுளுகொட்டாய் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏராளமான கிராம மக்கள் பள்ளி, கல்லூரி செல்ல நீண்ட தூரம் நடந்து வந்து பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடமும், பழுதடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதற்கு மாற்றாக புதிய நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், வெயிலில் நீண்ட ேநரம் காத்திருக்க ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் புதியதாக  நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என இப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,shore ,Kadathur ,
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு