×

பனமரத்துப்பட்டியில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை

அரூர், ஜன.30: அரூர் அருகே பனமரத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர்- தர்மபுரி மெயின் சாலையில் மொரப்பூர் அருகே செட்ரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செட்ரப்பட்டி, பனமரத்துப்பட்டி உள்பட ஏராளமான கிராம மக்கள் பள்ளி, கல்லூரி செல்ல, மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை வாங்க, அரூர் மொரப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஊரிலிருந்து சிறிது தூரம் நடந்து வந்து பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடமும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இடித்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட நிழற்கூடத்திற்கு மாற்றாக, நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், வெயில், மழையில் காத்திருக்க ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மீண்டும் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்கோள் விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை