×

ஜாக்டோ, ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு - அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.30: பெரம்பலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு சார்பாக ஜாக்டோ, ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, இந்து மஸ்தூர் சபா உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் பெரம்பலூர் மாவட்ட கூட்டுக் குழுவினர் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பிலுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத் தும் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் கணேசன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, புதிய கிளைத்தலைவர் கோனேரிப்பாளையம் குமார், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சங்கர் கணேசன், நியாயவிலைக் கடை விற்பனையாளர் சங்கம் மேகநாதன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தியாகராஜன், இந்து மஸ்தூர்சபா செயலாளர் சின்னசாமி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணிமேகலை, மாவட்ட தலைவர் சுமதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Tags : trade unions ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...