×

திருப்பத்தூர், வாலாஜாவில் சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர், ஜன.30: திருப்பத்தூர், வாலாஜாவில் சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூரை சேர்ந்தவர் அருள்(36), இவர் அதேபகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து அருளை கைது செய்தனர். இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பிரவேஷ்குமார், கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் அருளை குண்டர் சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதேபோல் வாலாஜா அடுத்த வாங்கூரை சேர்ந்த அருள்(36), சாராய வியாபாரி. இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

Tags : persons ,robbery ,Tirupattur ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...