×

ரூ.2.85 கோடியில் தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை

ஈரோடு, ஜன.29: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை நேற்று நடந்தது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டபம் வீதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மரப்பாலம் ரோடு கே.ஏ.எஸ்.நகரில் 50 லட்சம் ரூபாய் செலவிலும், ராஜகோபால் தோட்டம் ராயல் லே-அவுட் பகுதியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தார்ச்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. வைராபாளையம் ரோட்டில் 70 லட்சம் ரூபாய் செலவிலும், கிருஷ்ணம்பாளையம் விஜிபி கார்டன் பகுதியில் ஒருகோடி ரூபாய் மதிப்பிலும் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜையை துவக்கி வைத்தனர்.  ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட காவிரிக்கரை பகுதியில் ரூ.4.50 லட்சத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டாரை திறந்து வைத்தனர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...