×

ஆட்டையாம்பட்டியில் கோயில், வீடுகளுக்குள் புகுந்து துணிகர திருட்டு

ஆட்டையாம்பட்டி, ஜன.29: ஆட்டையாம்பட்டியில், அடுத்தடுத்த கோயில் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டையாம்பட்டியில் பெரும்பாலான மக்கள் குலதெய்வமாக அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை பங்காளிகள் ஒன்று சேர்ந்து வழிபட்டு வருகின்றனர். மற்ற நாட்களில் கோயில் வீடுகளில் கிராம தெய்வங்களின் சிலையை வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து 3 கோயில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், 2 கிராம் அம்மன் நகை மற்றும் ₹5000 பணத்துடன் உண்டியலை திருடிச்சென்றனர்.

நேற்று காலை கோயில் வீடு பக்கமாக சென்ற மக்கள் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டிச் சென்றிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இந்த சம்பம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Temple ,houses ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்