×

திருவேடகத்தில் தெப்ப திருவிழா கோலாகலம்

சோழவந்தான், ஜன.25: சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா நடைபெற்றது.சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் உள்ள ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் கோவில் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக காலை அம்பாளுடன் சுவாமி கோவிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மேலும் தெப்பம் முழுவதும் பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். இரவு 8 மணியளவில் மின் அலங்காரத்தில் ஏழவார்குழலி அம்மன் சமேதமாக ஏடகநாதர் பிரம்ம தீர்த்த தெப்பத்தை சுற்றி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஊர்வலத்தில் முப்பெரும் தேவியர், காளி, கருப்பணசுவாமி வேடமணிந்த பக்தர்கள் நடனமாடியபடி வந்தனர். பின்னர் நான்கு ரத வீதியிலும் வலம் வந்த சுவாமியையும், அம்பாளையும் வீடுகள் தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

Tags : festival ,Tappu ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு