×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் அடித்துச்செல்லப்பட்டார் தேடும் பணி தீவிரம்


பென்னாகரம், ஜன.10: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. லளிகம் அடுத்த கண்ணனூர் பகுதியை சேர்ந்த  ஆதிமூலம் மகன் மணிகன்டன்(21). இவர், ஓசூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியற்றி வருகிறார். இந்நிலையில், உறவினரின் ஈமச்சடங்கிற்காக நேற்று ஒகேனக்கல்லுக்கு உறவினர்களுடன் வந்துள்ளார். பின்னர், முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, பரிசல் ஓட்டிகளின் துணையுடன், மணிகண்டனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags : Hogan ,Cauvery River ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு