×

மாங்குளத்தில் ஒரு வருடமாக தண்ணீர் வராத குடிநீர் தொட்டி

மானாமதுரை, ஜன.10: ஒரு வருடமாக குடிநீர் தொட்டி பழுதாகி கிடப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. பருவமழை பொய்த்துள்ளதால் கிராமங்களில் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 2017ம் ஆண்டிலேயே மானாமதுரை ஒன்றிய பகுதியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போது ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு இடங்களில் சிறுமின் விசை குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், முறையாக பராமரிக்காததால் தற்போது மின்மோட்டார் பழுதடைந்து, தண்ணீர் ஏற்ற முடியாமல் காட்சிப்பொருளாக மாறிவிட்டது. பல மின்விசை தொட்டிகளில் தண்ணீர் இல்லாமல் போஸ்டர் ஒட்டும் இடமாகவும், கால்நடைகளை கட்டும் தொழுவமாகவும் மாறிவிட்டனமானாமதுரை மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்ஊரணி அம்பேத்கார் நகர் பகுதியில் கடந்த ஓராண்டாக சிறுமின்விசை குடிநீர்தொட்டி பழுதடைந்து உள்ளது.

Tags : Mankulam ,
× RELATED வெப்பம் தணித்த கோடை மழை