×

கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜன. 9: புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், நகராட்சி ஒப்பந்த ஊழியர் களுக்கு மாதம் ரூ. 18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், .ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், நகராட்சி ஊழியர்களுக்கு வழங்க பட வேண்டிய 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8, 9 ஆகிய இரு நாட்களும் மத்திய  தொழிற் சங்கங்களின் சார்பில்  அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போ ராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது.

இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , கோ ரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் மன்னார்குடி நக ராட்சி அலுவலகம் வாயிலில் நேற்று  ஆர்ப்பாட்டம் செய்து தொடர்ந்து  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி அலுவலர் சங்க கிளை தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் சிவசுப்பிர மணியன், மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர்  பேசினர்.

Tags : Manarcudu ,
× RELATED பணியிட மாறுதலை ரத்து செய்ய...