×

வடுவூரில் 11ம்தேதி சீனியர் ஆண்கள் கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு

மன்னார்குடி, ஜன. 9: தமிழ்நாடு மாநில சீனியர் கபடி சாம்பியன் பட்ட போட்டிக்கு திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள ஆண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 11ம் தேதி  வடுவூரில் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ராஜ ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு மாநில 66 வது சீனியர் கபடி சாம்பியன் சிப் போட்டி நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோட்டில் ஐனவரி 19 முதல் 20 வரை இரு தினங்கள் நடைபெற உள்ளது.மாநில அளவிலான இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் திருவாரூர் மாவட்ட சீனியர் ஆண்கள் கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 11ம் தேதி  மாலை 3 மணியளவில் வடுவூர் உள் விளையாட்டு அரங்கு வளாகத்தில் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உடல் எடை 85 கிலோவிற்குள் உள்ள வீரர்கள் மட்டும் தேர்வு போட்டியில் பங்கேற்கலாம் . முக்கியமாக பல்வேறு நிறுவனங்களின் அணிகளில் விளையாடும் வீரர்கள் இப் போட்டி தேர்வில் கண்டிப்பாக பங்கேற்க இயலாது இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Veterans ,men ,kabaddi team ,
× RELATED பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது!