×

செய்யாறு அருகே தூக்குபோட்டு பெண் தற்கொலை

செய்யாறு, ஜன.4: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி, பூ வியாபாரி. இவரது மனைவி காமாட்சி(50). இவர் விறகு வெட்டி சிறுது சிறிதாக சேர்த்து வைத்திருந்த ₹25 ஆயிரத்தை மணி வீண் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தம்பதிக்குள் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு மணி அங்கிருந்து சென்று விட்டாராம். இதில் விரக்தியடைந்த காமாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் காமாட்சி வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, காமாட்சி தூக்குபோட்டு இறந்து கிடந்தது தெரிந்தது.தகவல் அறிந்த தூசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Kodar ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...