×

முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

தர்மபுரி, ஜன.3:தர்மபுரி டவுன் மதிகோன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(26). இவர் வாகனங்களுக்கு சீட் கவர் தயாரிக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில், மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே சத்தியராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே வந்த குரங்கு குல்லா அணிந்திருந்த ஒரு நபர், முகவரி விசாரிப்பது போல் சத்தியராஜிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்தியராஜ் முகத்தில் கீறினார். இதில் அதிர்ச்சி அடைந்த சத்தியராஜ் தப்பியோடும் போது, அவரது முதுகில் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினார். இதனால் சத்தியராஜ் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டதும், மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். சத்தியராஜூடன் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சத்தியராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த நபருக்கும் உள்ள முன்விரோதம் காரணமாக, கத்தி குத்து சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : men ,screaming ,
× RELATED சேலம் அருகே பரபரப்பு ஓடை பாலத்திற்கு...