×

மொடக்குறிச்சி பகுதியில் 16 உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நிறைவு

மொடக்குறிச்சி, ஜன.3:  மொடக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் விவசாய விளைநிலங்களின் வழியாக 62 உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியில் தற்போது 16 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சி தாசில்தார் அசரப்புனிஷா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ., முருகேசன் கலந்து கொண்டு, ஆன்-லைன் மூலம் சான்றுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை நிலுவையில் உள்ள சான்றுகளை வழங்குவது குறித்தும், மொடக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் விவசாய விளைநிலங்களின் வழியாக 62 உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணியில் தற்போது 16 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மீதி அமைக்க வேண்டிய டவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஏழு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதியுள்ள விவசாயிகளை கணக்கிட்டு இழப்பீட்டு தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மொடக்குறிச்சி மண்டல துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் பவர்கிரிட் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tower ,area ,Modakurichi ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...