×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வி.ஏ.ஒ.க்கள் மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர்,டிச.25: திருப்பூர் குமரன் ரோட்டில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட இடமாறுதல் வழங்க வேண்டும். வி.ஏ.ஓ., டிஜிட்டல் கையொப்பத்துடன், ‘இ-அடங்கல்’ வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 ம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக நேற்று திருப்பூர் குமரன் ரோட்டில் மனித சங்கி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஆறுமுகசாமி முன்னிலை வகித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகள் குறித்து கோஷமிட்டனர். போராட்டத்தில் 76 க்கும் மேற்பட்ட விஏஒ.க்கள் கலந்துகொண்டனர்.


Tags : VAOs ,
× RELATED கீழ்வேளூர் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..!!