×

தர்மபுரி காவல் துறையை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர் டிச.21: அரியலூர் அண்ணாசிலை அருகே  ஜன நாயக  மாதர்சங்கம் ,அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தர்மபுரியில் மாற்றுத்திறனாளி பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதி கேட்டுபோராடிய மற்றுதிறனாளிகள் மாதர் சங்க நிர்வாகிகள் மீது அடக்குமுறையை ஏவிய தர்மபுரி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பரமணியன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியம், ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில குழு உறுப்பினர் துரைசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, சிஐடியூசி மாவட்ட தலைவர் சிற்றம்பலம், மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : protest ,Dhammapuri Police Department ,
× RELATED பெரம்பலூரில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!