விருதுநகர், டிச. 21: விருதுநகர் அருப்புக்கோட்டை ரோடு எம்ஜிஆர் சிலை அருகில் ராஜேஸ்வரி மஹாலில் டாடா நிறுவனத்தின் தனிஷ்க் பிரமாண்டமான நகை கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை மலர்விழி முத்து, விவிவி பெண்கள் கல்லூரி முதல்வர் மீனாராணி, அழகப்பா பல்கலைக்கழக படிப்பக மைய இயக்குநர் காயத்ரி, கூரைக்குண்டு ஊராட்சி முன்னாள் தலைவர் கனகபுஷ்பம் மற்றும் சுமதி, புஷ்பாவதி, ரமணி, பாமினி, அன்னலட்சுமி, மல்லி வியாபாரிகள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கினர்.
இக்கண்காட்சி டிச.25 வரை நடைபெறும். நகைகளின் செய்கூலியில் 25 சதவீதமும், வைர நகையின் மதிப்பின் மீது 25 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை காளீஸ்வரி நிறுவன இயக்குநர் எஸ்.ராஜேஸ் மற்றும் மேலாளர் ராஜேஸ்வரன், தனிஷ்க் ஏரியா மேலாளர் ராஜா செய்துள்ளனர்.