செந்துறை,டிச.20; செந் அரியலூர் மாவட்டம் செந்துறை உடையார்பாளையம் சாலையில் பெரிய ஓடையின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு இருபுறமும் சாலை அமைக்கும் போது கீழ் பகுதியில் ஓடை மண்ணை கொட்டியதன் விளைவாக அந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் அடிக்கடி சாலையில் பள்ளம் ஏற்படுகிறது, இதனை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்தும் வருகின்றனர்.
ஆனால் அதிகளவில் எடை கொண்ட கன ரக வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து சாலையில்பள்ளம் ஏற்படுகிறது, இதனால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவிகள், பொதுமக்கள் மற்றும் இலங்கச்சேரி, ஆதிகுடிக்காடு, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், இரும்புலிகுறிச்சி கிராம மக்கள் செந்துறைக்கு வருபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாலத்தின் இரு புறமும் தரமான சாலையை அமைத்துதர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.