×

காரிமங்கலம் பகுதியில் பன்னீர் கரும்பு அறுவடைக்கு தயார்

தர்மபுரி, டிச.19: காரிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பன்னீர்கரும்பு, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு, மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடிலம், காரிமங்கலம், கன்னிப்பட்டி ஆகிய பகுதிகளில் பன்னீர்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.  

பொங்கலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பன்னீர் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 10 மாதங்களுக்கு முன் கரும்பு நடவு செய்தோம். உரிய நேரத்தில் பருவமழை கை கொடுக்காததால், கரும்புகளுக்கு லாரியில் தண்ணீர் வாங்கி வந்து ஊற்றி காப்பாற்றியுள்ளோம். தற்போது நன்கு விளைந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்,’ என்றனர்.

Tags : area ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு